கோவையில் 128 மையங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - 35,827 மாணவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் உள்ள 360 பள்ளிகளைச் சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் உட்பட மொத்தம் 35,827 பேர் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு அட்டவணைப்படி இன்று மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது.



கோவை: தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான 6 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 12 வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள், 2 விடைத்தாள் பாதுகாப்பு மையங்கள், 32 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 360 பள்ளிகளைச் சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் உட்பட மொத்தம் 35,827 பேர் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு அட்டவணைப்படி இன்று மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது.

மாவட்டம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் சரியான நேரத்தில் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு வினாத்தாள்களை பாதுகாக்க ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையத்தில் மாணவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கும் பணி நேற்றும், இன்றும் நடைபெற்றது.

மேலும், மாணவர்கள், தங்களது தேர்வு மையத்தை எளிதாகக் கண்டறியும் வகையில், ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் வெளியே உள்ள தகவல் பலகையில் அறை எண், ஹால் டிக்கெட் எண், தேர்வு தேதி உள்ளிட்டவை அடங்கிய அறிவிக்கைகள் ஒட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வின் போதும், காலை நேரத்தில் வினாத்தாள்கள் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்படும். தேர்வுக் கூடத்தில் மாணவர்களின் முறைகேடுகளை கண்காணிக்கவும், தடுக்கவும் 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட்டை எடுத்துச் செல்ல வேண்டுமெனவும், நடத்தை விதிகளை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்வையொட்டி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தடையில்லா பேருந்து சேவை மற்றும் மின் விநியோகம் செய்து தரப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...