உடுமலை அருகே வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

உடுமலை அருகேயுள்ள சடையகவுண்டன் புதூரில் மின்கசிவு காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.


திருப்பூர்: உடுமலை அருகே மின்கசிவு காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமானது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சடைய கவுண்டன் புதூரில் லட்சுமணன் (55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமணன் குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோவில் திருவிழாவுக்குச் சென்றார்.



இன்று காலையில் திரும்பி வந்து பார்த்த போது வீடு முழுவதும் எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



பின்னர் உள்ளே சென்று பார்த்த பீரோவில் வைத்திருந்த வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள், இரு சக்கர நான்கு சக்கர வாகனம், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை எரிந்து சேதமானது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...