கோவை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை!


தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக மழை பொய்த்துப் போய் உள்ளதாலும், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததன் காரணத்தினாலும் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது.

இதனால், விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அத்யாவசியத் தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக வறட்சியின் காரணமாக விவசாயிகள் உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வறட்சியானது பசுமை செழித்திருந்த கோவை மாவட்டத்தையும் சமீப காலமாக தாக்கி வருகின்றனது. அதன் படி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீராதாரமாக இருந்த சிறுவாணி, அத்திக்கடவு, பவானி, ஆழியார் உள்ளிட்ட அணைகளுக்கு சரியான நீர் வரத்து இல்லாததாலும், பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததின் காரணத்தாலும் கோவையில் தற்போது வறட்சி நிலவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது கோவை மாவட்ட நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

ஏற்கனவே இருக்கும் பழைய ஆழ்துளை கிணறுகளை புதுப்பிக்கவும், புனரமைக்கவும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

Newsletter

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...