திருப்பூரில் மாநில அளவிலான காதி மற்றும் கிராம தொழில் ஆணைய கண்காட்சி - தொடங்கி வைத்த எம்.எஸ்.எம்.இ தலைவர்!

திருப்பூர் அடுத்த வாலிபாளையம் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் மாநில அளவிலான கண்காட்சி இன்று தொடங்கி மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் காதி மற்றும் கிராம ஆணையத்தின் மாநில அளவிலான கண்காட்சியை எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் இன்று துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சாலையில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் காதி கண்காட்சி இன்று முதல் வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் கலந்து கொண்டு, கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கண்காட்சியை நேரில் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பிரதம மந்திரியின் பி.எம்.இ.ஜி.பி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தொழில் துவங்க உதவித்தொகை வழங்கப்பட்டது.



இந்த விழாவில் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.பாண்டே, இயக்குனர் ரித்தேஷ் குமார், மாநில இயக்குனர் பி.என். சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...