கோவையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி - கணவரை தொடர்ந்து மனைவி கைது!

கோவை கணபதி அருகே கடந்த 2019ஆம் ஆண்டில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்த கணவர் செந்தில்குமாரை தொடர்ந்து மனைவி லலிதாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.



கணபதி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (34). இவரது மனைவி லலிதா (28). இவர்கள் இருவரும் மேலும் 5 பேருடன் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 17.5 சதவீத வட்டியுடன் 100 நாட்கள் கழித்து ரூ.2 லட்சம் திரும்ப தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மற்றொரு திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 20 சதவீத வட்டியுடன் 12 மாதங்கள் கழித்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் திருப்பி தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இந்த கவர்ச்சிகர அறிவிப்புகளை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ஆய்வாளர் செல்வராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரின் மனைவி லலிதாவை ஆய்வாளர் செல்வராணி தலைமையிலான போலீசார் இன்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...