கோவையில் பட்டப்பகலில் ஐடி ஊழியர் வீட்டில் புகுந்து மின்னணு சாதனங்கள் கொள்ளை!

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ் என்பவர் வீட்டில், பட்டப்பகலில் புகுந்து விலை உயர்ந்த ஆப்பிள் லேப்டாப், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மர்ம நபர் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஐ டி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ். இரவு வேலை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். வீட்டின் உட்புற பூட்டாமல் உறங்கினார். அப்போது அங்கு முகவரி கேட்பதுபோல வந்த மர்ம நபர், அக்கம் பக்கம் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார்.

அதனடிப்படைதில் வீடுகளில் உள்ளவர்களிடம் விலாசம் கேட்ட அந்த மர்ம நபர், ஐடி ஊழியரான டோமினிக் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் இரவு பணி முடித்த நிலையில், அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்.

அவரை எழுப்பாமல் அப்படியே நைசாக உள்ளே சென்று வீட்டிலிருந்த மின்னணு சாதனங்களான ஆப்பிள் மேக் மடிக்கணினி, டெல் அடாப்டர், உயர் ரக ஹெட்செட், வையர்லஸ் நெக் பேண்ட், ஸ்மார்ட் ஃபோன், ஸ்மார்ட் வாட்ச், பேக் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து நொடிப்பொழுதில் ஓட்டம் பிடித்தார்.



அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறிய அந்த மர்ம நபர், மருத்துவமனை செல்ல வேண்டும், அவசரமாக போங்க என்றார். பள்ளி செல்லும் வாகனம் என்பதால் மருத்துவமனை செல்ல முடியாது என்று தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிட்டார்.

அப்போது எங்கு செல்வதென்று தெரியாமல் மர்ம நபர் தடுமாறும் காட்சி வெளியாகி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. லேப்டாப் பேக்குடன் அந்த நபர் ஓடும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐடி ஊழியர் தந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலிஸார் வழக்கு பதிந்து, கொள்ளையில் ஈடுபட்ட நபரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...