கோவையில் டிராவல்ஸ் ஊழியர் மீது தாக்குதல் - போதை இளைஞர் கைது

கோவை பீளமேடு பகுதியில் குடிபோதையிலிருந்ததால் பேருந்துக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த தனியார் டிராவல்ஸ் ஊழியர் கீர்த்தனா என்பவரை தகாத வார்த்தையில் பேசி, தாக்கிய வெங்கடேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பீளமேடு பகுதியில் டிக்கெட் கொடுக்க மறுத்த பெண் ஊழியரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு புதுரை சேர்ந்தவர் கீர்த்தனா (25). இவர் காந்திபுரம் முதலாவது வீதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்யும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணியிலிருந்த போது சென்னைக்கு செல்வதற்கு டிக்கெட் கேட்டு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் குடிபோதையிலிருந்ததால் கீர்த்தனா டிக்கெட் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி கீர்த்தனாவின் கன்னத்தில் தாக்கினார்.

பின்னர் கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து கீர்த்தனா கொடுத்த புகாரில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் இளம் பெண்ணை தாக்கியது சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்(44) என்பதும், டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....