கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் - கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

கோவை கார் வெடிப்பு சம்பவம், மற்றும் கர்நாடக மாநிலம், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம்’ என்று, ஐ.எஸ் கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது குறித்து அவ்வமைப்பின் ஆதரவு இதழான வாய்ஸ் ஆப் கொரோசான் செய்தி வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய தினம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஜமேசா முபின் (வயது29). என்பவர் உயிரிழந்தார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மிகப்பெரிய அளவிலான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக அப்போதே தகவல் வெளியானது. ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக இத்தனை நாள்கள் எந்த அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.



இந்த நிலையில் `கோவை கார் வெடிப்பு சம்பவம், மற்றும் கர்நாடக மாநிலம், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம்’என ஐ.எஸ் கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது குறித்து அவ்வமைப்பின் ஆதரவு இதழான வாய்ஸ் ஆப் கொரோசான் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியாவிலுள்ள தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் மூலம் இரண்டு சம்பவங்கள் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக 200 பேரைச் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து கண்காணித்துவருகிறோம். தற்போது ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதால் அவர்களின் நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.

கார் வெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு உண்மையிலேயே பொறுப்பேற்றிருக்கிறதா அல்லது அவர்கள் பெயரில் வேறு யாராவது தகவல் வெளியிட்டிருக்கிறார்களா? என்றும் விசாரித்துவருகிறோம், என்றனர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...