திரிபுராவில் எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் - பாஜகவை கண்டித்து தாராபுரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

திரிபுராவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து தாராபுரம் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திரிபுராவில் எதிர்க்கட்சியினர் மீது காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிகக்குறைந்த அளவு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருக்கும் பாஜக, ஆத்திரத்தின் உச்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



பாஜகவின் காட்டுமிராண்டி தனமான இந்த தாக்குதலை கண்டித்து, தாராபுரம் அண்ணாசிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னுச்சாமி தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் தாலூகா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் முத்துசாமி, கோவிந்தராஜ், ராஜேந்திரன் மற்றும் செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...