கோவை- அவிநாசி சாலையில் சுரங்க பாதை மூடல்

கோவை-அவிநாசி சாலையில் உள்ள பாதாள சுரங்க பாதை பயன்பாட்டில் இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதையடுத்து அந்த பாதையை மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.


கோவை: அவிநாசி சாலையில் உள்ள பாதாள சுரங்க பாதை பயன்பாட்டில் இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.

கோவை-அவினாசி சாலையில் மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் ரவுண்டானா பகுதியிலிருந்து புரூக்பாண்ட் சாலைக்குச் செல்ல தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதையை, பொதுமக்கள் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் விட்டதால், காலப்போக்கில், சமூக விரோதிகள் இந்த சுரங்கப்பாதையைத் திறந்தவெளி கழிப்பிடமாகவும், மது அருந்துவதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.



இந்த பாதையை அடைக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் பூங்கா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த பாதையை அடைத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மேம்பாலம் சுரங்கப்பாதையின் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் கடக்கத் தனிப் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் பின்னர் பொதுமக்கள் பயன்பாடு குறைவாக இருந்ததால் மூடப்பட்டது. இந்த பாதையில் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...