மகளிர் தின கொண்டாட்டம் - கோவையில் பெண் காவலர்களுக்கு பிசியோதெரபி ஆலோசனை!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்காக, கோவை காவல் ஆணையர் அலுவலக நடத்தப்பட்ட வலியில்லாத வாழ்விற்கு வழிவகுக்கும் பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கினை துணை ஆணையர் சுகாசினி தொடக்கி வைத்தார்.



கோவை: மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கான "வலியில்லாத வாழ்விற்கு வழிவகுக்கும் பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கு" கோவை காவல் ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி தொடங்கி வைத்தார்.



இதில், வலி வருவதற்கான காரணங்கள், பிசியோதெரபி சிகிச்சை முறைகள், வலி வராமல் தடுக்கும் முறைகள் குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.



குறிப்பாக பணியில் உள்ள பெண் காவலர்கள் சில நேரங்களில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய சூழலில் உடல் ரீதியாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மகளிர் தினத்தன்று பிசியோதெரபி சிகிச்சை விழிப்புணர்வு வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...