கோவையில் மாடியிலிருந்து தவறி விழுந்து 12ம் வகுப்பு மாணவி பலி - போலீஸ் விசாரணை

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங்யுனிட் குடியிருப்புப் பகுதியில் 13வது மாடியில் இருந்து தவறி விழுந்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மாணவி தவறிவிழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான 1848 வீடுகள் உள்ளன. இவைகள் ஏ, பி, சி டி என 4 பிரிவிகளாக பிரிக்கப்பட்டு அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டி பிளாக்கில் 13வது மாடியில் வசித்துவரும் கோவை மாநகராட்சியில் வேலை செய்யபவரின் மகள் தாரணி என்பவர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றிரவு இரவு 9 மணி அளவில் திடீரென 13வது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



அவர் நேற்று பொதுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெற்று வந்த நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.



உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தாரணி தவறிவிழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...