கோவை உக்கடம் அருகே பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் - ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

உக்கடம் அருகேயுள்ள சாரமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்களுக்கான உரிமைகள், சட்ட பாதுகாப்பு, சொத்துரிமை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் உக்கடம் அருகே நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின்படி, தேசிய மகளிர் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கோவை உக்கடம் அருகே பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



உக்கடம் அடுத்த சாரமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிமன்றத்தின் நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த முகாமில் சட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள், பெண் பாதுகாப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.ஜே.அபிராமி பெண்களின் உரிமைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினை சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...