அலைபேசியில் பொதுமக்கள் போர்வையில் பேசிய திமுகவினர் மீது புகார் அளிக்க உள்ளதாக சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுணன் பேட்டி


கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன் ஹூசூர் சாலையில் உள்ள தனது சட்டமன்ற அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அதிமுக கட்சி உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பேசுகிறேன் என்ற பெயரில் தன்னையும் தன் குடும்பத்தினரையும் சிலர் அவதூறாக அலைபேசியில் பேசுவதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், திமுக-வை சேர்ந்த சிலரே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தான் நம்புவதாகவும், தனக்கு வந்த அழைப்புகளின் விவரம் தன்னிடத்தில் உள்ளதால் அவதூறாக பேசியவர்கள் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சட்டமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்று விட்டு இன்று காலை கோவை திரும்பியதாகவும் வந்த உடனே மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்ததாக கூறியவர், பொதுமக்கள் அதிமுக என்ற கட்சிக்கே வாக்களித்தனர் என்றும் அவர்களது தேவைகளை சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு செய்வேன் என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...