கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து மார்ச் 12-யில் போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசைக் கண்டித்து வருகிற மார்ச் 12- ஆம் தேதியன்று கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டம் நடத்த இருப்பதாக கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள எல்லைக்குள் 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகின்றது.

அதில் பாலக்காடு மாவட்டம் தேக்குவட்டை என்ற இடத்தில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் மஞ்சகண்டி உள்ளிட்ட மற்ற இடங்களில் தடுப்பு அணைகள் கட்டும் பணியினை துரிதப்படுத்தியுள்ளது.

இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் விவசாயம் மட்டுமில்லாது குடிநீர் தட்டுபாடும் மிக பெரிய அளவில் ஏற்படும் என்பதால் கேரளா அரசு தடுப்பணைகள் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது.

இந்த சூழலில் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக, தந்தை பெரியார் திராவிட கழகம், கொங்கு ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியவை பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப்பு லட்சுமி ஜெகதீசன், முத்துச்சாமி, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் வழித்தடமான க.க.சாவடியை மறித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வருகிற மார்ச் 12 ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...