கோவையில் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு - ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், அமில வீச்சினால் பாதிக்கப்படுபவர்களுக்கான சட்ட உதவி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் செட்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா, பள்ளி மாணவர்களுடன் உரையாடி சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



குறிப்பாக அமில வீச்சினால் கடுமையாக பாதிக்கப்படும் நபர்களுக்கு செய்யப்படும் சட்டப் பணிகள் உதவி மற்றும் இதர சட்ட உதவிகள் குறித்து மாணாக்கர்களிடம் எடுத்துரைத்தார்.

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சேரன், ஓசூர் சட்டம் மற்றும் பொதுத்தேர்வு குறித்த உளவியல் ஆலோசனைகள் குறித்து விளக்கினார். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் இந்த முகாமில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சேரன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...