தாராபுரத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் கேள்வி, பதில் போட்டி

தாராபுரத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கிளையின் சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கிளையின் தலைவர் உமர் பாரூக் தலைமையில் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கேள்வி பதில் போட்டி ஏன் என்ற தலைப்பில் மாநில துணை தலைவர் சையது இப்ராஹிம் உரையாற்றினார்.

இதேபோல், சஹாபிய பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் மாநில துணை செயலாளர் அப்துல் ரகுமான், மறுமை நாள் என்ற தலைப்பில் ஜமாத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் அல்தாபி ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...