150 கிராம் தங்கத்தோடு வடமாநில இளைஞர் தப்பியோட்டம் - கோவை போலீசார் விசாரணை!

கோவையில் ரகுகுமார் என்ற தங்க பட்டறை உரிமையாளரிடம் ஆபரணங்கள் செய்வதற்காகப் பெற்ற 150 கிராம் தங்கத்துடன் தப்பியோடிய மேற்கு வங்கத்தை சேர்ந்த பாபன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு குமார் (வயது45). இவர் பொன்னையராஜபுரம் பகுதியில் தங்க பட்டறை நடத்தி வருகின்றார். இவரிடம் கடந்த ஐந்து வருடங்களாக பாபன் என்ற நபர் பணியாற்றி வந்தார். மேற்கு வங்கத்தைச் சார்ந்த இவர், ரகுகுமார் தரும் தங்க உலோகத்தை ஆபரணமாக மாற்றி தருவது இவரது பணி.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 7 லட்சம் மதிப்பிலான 150 கிராம் எடையுள்ள தங்கத்தை கொடுத்து தோடு மற்றும் கம்மல் செய்து தர கேட்டுள்ளார்.

ரகுகுமாரிடம் அந்த தங்க உலோகத்தைப் பெற்றுக் கொண்ட பாபன், தங்க நகை ஆபரணங்கள் செய்யாமல், தனது சொந்த ஊருக்கு தங்கத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து ரகுகுமார் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாபனை தேடி வருகின்றனர். தங்க நகை பட்டறையில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் சில நேரங்களில் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடுவது கோவையில் தொடர் கதையாகி வருவது தங்கப்பட்டறை உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...