கோவையில் லாரி பேட்டரி திருடிய இளைஞர் கைது - கூட்டாளிகளுக்கு போலீஸ் வலை!

கோவை ஆத்துபாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜபாருல்லா என்பவரின் லாரியில் பேட்டரி திருடிய ரிஸ்வான் சுகைல் என்பவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து, தப்பியோடிய 2 பேரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.



கோவை: கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜபாருல்லா சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்து இருந்தார். இவரது லாரியில் இருந்து சிலர் பொருட்களை திருடுவதாக ஜபாருல்லாவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தமது நண்பர்களுடன் அவர் அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்பொழுது மூன்றுபேர் லாரியில் இருந்து பேட்டரியை திருடிக் கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை ஜபாருல்லா பிடிக்க முயன்றார். அப்பொழுது, ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். மற்ற இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.



இதை அடுத்து அவரை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஜபாருல்லா ஒப்படைத்தார். விசாரணையில், அந்த நபர் கரும்பு கடையைச் சேர்ந்த ரிஸ்வான் சுகைல் என்பதும், இவர் தனது நண்பர்கள் முகமது ஷெரீப், அப்சல் ரகுமான் ஆகியோருடன் சேர்ந்து லாரியில் இருந்து பேட்டரியை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதை அடுத்து ரிஸ்வான் சுகைலை போலீசார் கைது செய்ததோடு, தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...