முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கியத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கியம் பகுதியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச கண்ணாடிகளை வழங்கினார்.



திருப்பூர்: அலங்கியம் பகுதியில் முதல்வர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பகுதியில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை அமைச்சர் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் அலங்கியம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன் கலந்து கொண்டார்.



இந்த முகாமில் ஜே.எஸ்.டபிள்யூ இந்தியா விஷன் இன்ஸ்டியூட் சார்பில் மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு கண் குறைபாடுகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான கண் கண்ணாடிகளை வழங்கினர்.



இதில் அலங்கியம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் பொதுமக்கள் கலந்து கொண்டர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அலங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி குப்பு, ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, சின்னக்கம்பாளையம் பேரூராட்சி செயலாளர் பன்னீர்செல்வம், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சசிகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...