தாராபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - கோவில் பூசாரி பலி!

தாராபுரம் அருகே தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த கோவில் பூசாரியான சோமசுந்தரம் (57), தனது மனைவியுடன் உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் சோமசுந்தரம் உயிரிழந்தார்.


திருப்பூர்: தாராபுரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கல் மோதிக் கொண்ட விபத்தில் கோவில் பூசாரி பலியானார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (57). கோவில் பூசாரி. இவருடைய மனைவி தனலட்சுமி (55). இவர்கள் இருவரும் இரவு இருசக்கர வாகனத்தில், உடுமலை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செலாம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (18) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சோமசுந்தரம் வாகனம் மீது மோதியது.

இதில் பூசாரி சோமசுந்தரம் அவரது மனைவி தனலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த கோகுலும் கீழே விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பூசாரி சோமசுந்தரம் உயிரிழந்தார். அவர் மனைவி தனலெட்சுமி மற்றும் கோகுல் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...