கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - 2 பேருக்கு வழங்கிய கோவை ஆட்சியர்!

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணியின்போது காலமான இருவரது குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த நவமணி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது மகன் நரேந்திர குமாருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையினை வழங்கினார்.



இதேபோன்று, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ரவிக்குமார் உயிரிழந்த நிலையில் அவரது மகள் தனுஸ்ரீக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) அலர்மேல் மங்கை மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...