வழக்கறிஞர் கரீம் எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூல் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது.

கோவையில் கடந்த 1998ல் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களை முன்வைத்து வழக்கறிஞர் கரீம் எழுதிய நூல் தாழிடப்பட்ட கதவுகள். இந்நூலின் அறிமுக விழா சனியன்று சமுக நீதி வழக்கறிஞர் மய்யம் சார்பில் கோவை ரயில் நிலையம் அருகிலுள்ள அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் வெண்மணி தலைமை வகித்தார். 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ், திரைப்பட கலைஞர் ராஜேஷ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நத்தக்குமார் ஆகியோர் இந்நூலை அறிமுகம் செய்து பேசினர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...