சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவின் கோரிக்கையில் எவ்வித நியாயம் இல்லை, கோவையில் வைகோ கருத்து.


சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவின் கோரிக்கையில் எவ்வித நியாயம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அரசியல் சூழல் குறித்து தாம் எந்தவிதமான கருத்துக்களையும் கூறவில்லை எனவும் இன்று சட்டமன்றத்தில் திமுக ரகசிய வாக்கெடுப்பு நடத்த விடுத்த கோரிக்கை நியாயம் இல்லை எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இன்று கடைபிடிக்கப்பட்ட நடைமுறைதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறிய அவர் ரகசிய வாக்கெடுப்பு என்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவிதமான சலுகையும் வழங்கப்படவில்லை எனவும் அவர் அப்போது தெரிவித்தார். எனவே இந்த கோரிக்கைகளை முன்வைத்து திமுக சட்டமன்றத்தில் நடத்திய விவாதங்களும், அமளிகளும் தேவையில்லாத ஒன்று எனவும் வைகோ அப்போது குறிப்பிட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...