உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒப்பந்த பணியாளர் முறையை கைவிடுவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ‌‌ஏஐடியூசி உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் நகராட்சி பகுதியில் ஒப்பந்தம், வெளிச்சந்தை, தினக்கூலி, சுய உதவி குழு போன்ற முறைகளை கைவிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டது.



மேலும், பழைய ஓய்வூதியம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், தற்பொழுது பணி புரிந்து வரும் நிரந்தர தொழிலாளர்களை வேறு இடத்திற்கு வேறு வேலைக்கு மாற்றக்கூடாது, தற்பொழுது பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களின் சர்வீஸ் பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ‌சரவணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் நாகராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணசாமி. செளந்தரராஜன். சுப்பிரமணியம் உள்ளிட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...