சிங்காநல்லூரில் மதுபோதையில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த தச்சு வேலை செய்து வந்த ராம்கி என்பவர் மதுபோதையில் வீட்டின் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே வீட்டின் மாடியில் மதுபோதையில் செல்போன் பேசிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராம்கி(35) தச்சு தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடிப்பழக்கம் கொண்ட ராம்கி நேற்றைய தினம், அவரது வீட்டின் மாடியில்மதுபோதையில் நடந்தபடி, செல்போன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென மாடியிலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அவரது மனைவி சிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் மாடியிருந்து கீழே விழுந்து ராம்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...