கோவை அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்கம்!

கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துடியலூர் பகுதி திமுக செயலாளர் அருள்குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.


கோவை: துடியலூர் அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி இத்திட்டம் பல்வேறு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கு 1ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துடியலூர் பகுதி செயலாளர் அருள்குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராதாமணி, வட்ட கழக செயலாளர் ராஜசேகரன், பகுதி கழக பொருளாளர் ராக்கிமுத்து, வட்டக் கழக நிர்வாகிகள் வெங்கடேஷ், அன்பழகன், உதயகுமார், உதயகுமார், மணியன், ராஜ் கண்ணன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியை பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...