உடுமலை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ - தீத்தடுப்புப் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரளா எல்லையில் உள்ள மறையூர் காந்தலூர் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 ஏக்கர் பரப்பில் இருந்த அரியவகை மூலிகை மரங்கள் எரிந்து சாம்பலானது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதியான மறையூர் காந்தலூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பயங்கரமான காட்டு தீ ஏற்பட்டுள்ளது.



இதனால், அரிய வகை மூலிகை மரங்கள் உட்பட சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.



மேலும் தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதியில் உடுமலை வனத்துறையினர், கோடந்தூர் ஆட்டுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே, வனப்பகுதியில் தீத்தடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு உணவு மற்றும் தீத்தடுப்பு உபகரணங்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...