சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியேறிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியே வந்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.



தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிரணியில் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரின் நாற்காலி, மைக்கை உடைத்தனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜையின் மீது ஏறி கோஷமிட்டார். இதற்கு திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து சபாநாயகர் தி.மு.க எம்,எல்,ஏக்களை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற உத்தரவுவிட்டார். இந்நிலையில் திமுக எம்,எல்,ஏக்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டார்.  சட்டப்பேரவைக்குள் தரையில் அமர்ந்து மு.க.ஸ்டாலினுடன் திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது 20 திமுக உறுப்பினர்கள் உள்பட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது அவைக்காவலர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியே வந்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். சட்டமன்றத்தில் நடந்ததை விளக்கினார். தற்போது திமுக உறுப்பினர்கள் கவர்னரை சந்திக்க செல்வதாகவும் அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...