உடுமலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்

உடுமலை தலைமை அஞ்சலக பணியாளர்களுக்கு, உடுமலை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை உடுமலை தலைமை அஞ்சலக அதிகாரி கீதா தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: உடுமலையில் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தலைமை அஞ்சலக பணியாளர்களுக்காக உடுமலை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை உடுமலை தலைமை அஞ்சலக அதிகாரி கீதா தொடங்கி வைத்தார். உதவி அஞ்சலக அதிகாரி செல்வராஜன் முன்னிலை வகித்தார்.

இம்முகாமில், உடுமலை தலைமை அஞ்சலக பணியாளர்கள், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த, கிளை அஞ்சலகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

சித்த மருத்துவர்கள், கார்த்திகேயன், ஸ்ரீபப்பி, மருந்தாளுநர் பெனிலா, மருத்துவமனை பணியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட குழுவினர், சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை, அரசு மருத்துவ மனை சித்த மருத்துவ அலுவலர் லட்சுபதிராஜ், ஓய்வு பெற்ற அஞ்சலர் முகமது அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...