உடுமலையில் நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை திறக்க வேண்டும் - மலைவாழ் மக்கள் கோரிக்கை!

உடுமலை அருகே கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டு கிடக்கும் நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை மீண்டும் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூடப்பட்டு கிடக்கும் நாட்டுக் கோழிக்குஞ்சு பொறிப்பகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை அடுத்த குறிச்சிகோட்டை பகுதியில் கால்நடை துறை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த 2012-13ஆம் தேதி ஆண்டில் ரூ.30 லட்சம் செலவில் நாட்டு கோழி குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டது.

இங்கு, 2,000 முட்டைகளை அடைகாக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் மூலம், ஆண்டுக்கு ஏழு தடவை 2,000 கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

குஞ்சுகளை ஒரு மாதம் வரை பராமரித்து இலவசமாகவும், ரூ.40 மற்றும் ரூ.20 என்ற திட்ட நிதி அடிப்படையில் மலைவாழ் மக்கள், சிறு குறு விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த குஞ்சு பொரிப்பகம் தொடர்ந்து செயல்படுவதற்கு தொடர் செலவின நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகம் பயன்பாடின்றி மூடி கிடக்கிறது.

கட்டிடமும் பாழடைந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...