உடுமலையில் நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை திறக்க வேண்டும் - மலைவாழ் மக்கள் கோரிக்கை!

உடுமலை அருகே கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டு கிடக்கும் நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை மீண்டும் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூடப்பட்டு கிடக்கும் நாட்டுக் கோழிக்குஞ்சு பொறிப்பகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை அடுத்த குறிச்சிகோட்டை பகுதியில் கால்நடை துறை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த 2012-13ஆம் தேதி ஆண்டில் ரூ.30 லட்சம் செலவில் நாட்டு கோழி குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டது.

இங்கு, 2,000 முட்டைகளை அடைகாக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் மூலம், ஆண்டுக்கு ஏழு தடவை 2,000 கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

குஞ்சுகளை ஒரு மாதம் வரை பராமரித்து இலவசமாகவும், ரூ.40 மற்றும் ரூ.20 என்ற திட்ட நிதி அடிப்படையில் மலைவாழ் மக்கள், சிறு குறு விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த குஞ்சு பொரிப்பகம் தொடர்ந்து செயல்படுவதற்கு தொடர் செலவின நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகம் பயன்பாடின்றி மூடி கிடக்கிறது.

கட்டிடமும் பாழடைந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...