கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

கோவை வேலாண்டிபாளையம் அருகே கார் மூலம் கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள், ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வேலாண்டி பாளையம் அருகே கார் மூலம் கேரளாவுக்கு கடத்த 600 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையிலிருந்து சரக்கு வாகனங்கள், கார்கள் மற்றும் ரயில் மூலமாக கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குடிமை பொருள் அதிகாரிகள் அவ்வப்போது தணிக்கையில் ஈடுபட்டு ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தும், கடத்தல் காரர்களை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் அடுத்த மல்லேஸ்வரி நகரில், குடிமை பொருள் வழங்கல் ஆய்வாளர் மேனகா, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மாருதி எஸ்டீம் கார் ஒன்றை தணிக்கை செய்தனர். அப்போது, காரின் பின்புறம் 12 மூட்டைகளில் 600 கிலோ எடை கொண்ட பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த மோகன் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி, கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குறைந்த விலையில் ரேஷன் அரிசிகளை கொள்முதல் செய்து, அதிக லாபத்துடன் வட மாநில தொழிலாளர்களுக்கும், மாவு அரைக்கும் மில்களுக்கும் அரிசி சப்ளை செய்து வந்தது உறுதியானது.

இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...