பல்லடத்தில் ஆட்டோ மீது கார், பேருந்து மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது கார் மற்றும் பேருந்து மோதி ஒருவர் பலியான விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. விபத்தில் ஆட்டோவில் பயணித்த சரோஜினி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அண்ணா நகரில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பிரேம்குமார். நேற்று இரவு ராமசாமி அண்ணாமலை நகரை சேர்ந்த சரோஜினி என்ற மூதாட்டியும் அவரது மகன் வெள்ளியங்கிரியும் திருப்பூர், அங்கேரிபாளையத்தில் திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பிரேம்குமாரின் ஆட்டோவில் பல்லடத்தில் இருந்து வீட்டிற்கு சென்றனர்.

மின் நகர் என்ற இடத்தில் சாலையை ஆட்டோ கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியுள்ளது.



நிலைகுலைந்து நின்ற ஆட்டோ மீது கோவையில் இருந்து கொடுமுடி செல்லும் அரசு பேருந்தும் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சரோஜினி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோ ஓட்டுநர் பிரேம்குமார் மற்றும் மூதாட்டியின் மகன் வெள்ளியங்கிரி ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதையடுத்து, தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு இருவரும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



நேற்று இரவு நடந்த இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. முதலில் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதும் காட்சிகளும் எதிரே வந்த பேருந்து ஆட்டோ மீது மோதும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. விபத்துக்குள்ளான அரசு பேருந்தை பல்லடம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...