கோவையில் 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது

கோவை துடியலூர் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்களை ஒழிக்க தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் சரவணம்பட்டி- துடியலூர் சாலை ஆறுமுகம் ரைஸ் மில் அருகில் தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர், சோதனை மேற்கொண்டதில் சந்தேகப்படும்படியாக இரு மூட்டைகள் இருந்தன. காவல்துறையினர் அதனை திறந்து பார்த்தபோது கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்தவர்களை துடியலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.



அதில், அவர்கள் பீகாரை சேர்ந்த சந்தன்குமார்(வயது30) மற்றும் அன்ஹித்குமார்(வயது19) என்பதும், அதில் சந்தன்குமார் காளப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதும், அங்கு சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்ய எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.



இதனைத் தொடர்ந்து, சுமார் 7 லட்சம் மதிப்பிலான 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...