கோவையில் பழமையான விநாயகர் கோயில் சுவர் இடிப்பு - இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

கோவை பூ மார்க்கெட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு இருந்த விநாயகர் கோவில் சுவரை மாநகராட்சி ஊழியர்கள் இடித்த நிலையில், இதையறிந்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர், அங்கு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இடித்த சுவரை கட்டித்தர கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை பூ மார்க்கெட் அருகே பழமையான விநாயகர் கோவில் சுவரை இடித்த மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை பூ மார்க்கெட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் கோவிலின் சுற்று சுவரை இடித்ததாக கூறப்படுகிறது.



இதனை கேள்விப்பட்ட இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் இடிக்கப்பட்ட கோவில் சுவரை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அந்த கோவில் அரச மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து, இந்து அமைப்பினர் வழிபாடு நடத்தினர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினரால் அந்த கோவில் இடிக்கப்பட்ட போது, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...