கோவை பி.என்.பாளையத்தில் மேம்பாலப் பணிகள் தாமதம் - அடிக்கடி நிகழும் விபத்துகள்!

பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் முன் அறிவிப்பு இன்றி ஒருவழிப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்த பேருந்து எல்.எம்.டபிள்யூ பிரிவு அருகே சாலையோர சுவரில் மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில்மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியிலிருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து பல மாதங்களாகத் தூண்களுக்கு இடையே காங்கீரிட் ஓடுதளம் அமைக்கும் பணிகள் மெதுவாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் இந்த சாலை ஊட்டி, மைசூர் போன்ற பகுதிகளுக்குச் செல்ல முக்கியமானது என்பதால் வாகன போக்குவரத்து அதிகரித்துக் காணப்படும். இதனால் மேம்பாலப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆனால் மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக எல்.எம்.டபிள்.யூ பிரிவு வழியாக ஒரு வழிப்பாதையில் பேருந்துகள் அத்துமீறிச் செல்கின்றன.

இதனால் விபத்துகள் அதிகரிக்கிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி எல்.எம்.டபிள்யூ., பிரிவு அருகே ஒரு வழிப்பாதையில் பேருந்து ஒன்று வந்தது.

இந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கடைகளுக்கு அருகில் உள்ள சுவரில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாகக் கடைகளுக்குள் புகாமல் இருந்ததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பெரியநாயக்கன் பாளையம் மேம்பாலப் பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதைகளிலும் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளன. உடனடியாக சாலைகளைச் சீரமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...