உடுமலை ஏழுகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலையில் ஏழு குளம் பாசன திட்டத்திற்குட்பட்ட குளங்களில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: உடுமலை ஏழுகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏழு குளம் பாசன திட்டத்திற்கு உட்பட்ட குளங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நிரப்பப்படுகின்றன.



இந்த குளங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் எனத் தமிழக அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ஏழு குளங்களை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், நீர்தேக்க பரப்பளவு படிப்படியாக குறைந்து கரைகளில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

பருவமழை குறைந்து விட்டதால், இந்த ஏழு குளங்களில் நிரப்பப்படும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு, கரும்பு, தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், இந்தப் பகுதியில் விவசாயம் என்பது கேள்விக்குறியாகும். ஆகவே அனைத்து குளங்களிலும் பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...