கோவை இஸ்லாமியக் கல்லூரி பட்டமளிப்பு விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் உள்ள ஹிதாயா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 4வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், 68 மாணவியருக்கு ஆலிமா ஹாதியா எனும் பட்டம் வழங்கப்பட்டது.



கோவை: கோவையில் உள்ள ஹிதாயா மகளிர் கல்லூரியின் ‘நான்காம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டுவரும் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் பயின்ற 68 மாணவியருக்கு ‘ஆலிமா ஹாதியா’ எனும் பட்டம் வழங்கப்பட்டன.



ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி. M.முஹம்மது இஸ்மாயில் இம்தாதி வரவேற்புரை ஆற்றினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பஈ தலைமை உரையாற்றினார்.



இந்த நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத்தலைவர் மற்றும் சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் S.சம்பத் குமார் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆங்கில மொழித்துறையின் பேராசிரியர் முனைவர் R.பழனிவேல் ஆகியோர் சமுதாயக் கல்லூரியில் பயின்று பட்டயப்படிப்பினை வெற்றிகரமாக முடித்த மாணவியருக்கு வாழ்த்துரை வழங்கி சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.



தொடர்ந்து, இந்த சமூகத்திற்கு செய்யவேண்டிய பங்களிப்பு குறித்து தனது சிறப்புரையில் நினைவூட்டியதுடன் ‘ஆலிமா ஹாதியா’ பட்டம் மற்றும் கேடயத்தை அவர் வழங்கினார். லால்பேட்டை ஜாமியா மான்பஉல் அன்வார் கல்லூரியின் முதல்வர் மற்றும் கடலூர் மாவட்ட அரசு காஜி, மௌலானா மௌலவி முஃப்தி. A. நூருல் அமீன் ஹல்ரத் மன்பஈ .ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் ஜனாப் P.S.உமர் ஃபாரூக் நன்றி உரையாற்றினார்.



இந்த பட்டமளிப்பு விழாவில் அறிஞர் பெருமக்கள், ஆன்றோர்கள், சமூகத் தலைவர்கள், மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...