கோவை ஈமு நிதிநிறுவன மோசடி வழக்கு - குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை.. ரூ. 34 கோடி அபராதம்!

கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஈமு நிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.34 கோடி அபராதம் விதித்து டான்பிட் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.


கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் குயின் பார்ம் என்ற நிதி நிறுவனம் 2012ல் செயல்பட்டு வந்தது. இதில், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி விளம்பரப்படுத்தினர். அதில் 1114 பேர் 28.38 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்தனர். ஆனால், முதலீடு செய்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களான ஈரோடு கரண்டிப்பாளையத்தை சேர்ந்த மயில்சாமி, இவரது சகோதரர் சக்திவேல் மற்றும் மேலாளர்கள் வினோத், கார்த்திகேயன், கனகராஜ், தங்கவேல், முத்து ஆகியோரை 2013 போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை டான் ஃபிட் கோர்ட்டில் நடந்து வந்தது. இதை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவர்களில் மயில்சாமி மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை 28.72 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல கோவை மாவட்ட பொள்ளாச்சியில் குயின் ஈமு நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் 2012 ஆக செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 295 பேரிடம் 5.68 கோடி ரூபாய் மோசடி செய்து தொடர்பாக, அதன் பங்குதாரர் மயில்சாமி மற்றும் சக்திவேல் மற்றும் கிளை மேலாளர்கள் கார்த்திகேயன் அன்பழகன் குருசாமி ஆகியோரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி குற்றம்சாட்டப்பட்டவர்களில் மயில்சாமி, சக்திவேல் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை 5.68 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...