கோவை பன்னிமடை அருகே போர்வெல் குழாய்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை - பரபரப்பு!

பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, போர்வெல் குழாய்கள், வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு.


கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை அருகே வாழை தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை போர்வெல் குழாய்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு தேடி மலையடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு அடிக்கடி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் உள்ள கணேஷ் என்பவரது தோட்டத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்துள்ளது.



தோட்டத்தில் இருந்த போர்வெல் பைப்புகள், பில்டர் பைப்புகளை உடைத்த காட்டு யானை, 10க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.



இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...