உடுமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் - முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

உடுமலை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பேரவை கூட்டத்தில், காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டம், ஒன்றிய தலைவர் எலிசபெத் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி வழங்கும் பணியை சத்துணவு ஊழியர் பொறுப்பில் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் ஒன்றிய பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, ஒன்றிய துணைத் தலைவர் மாலதி, ஒன்றிய செயலாளர் ஆனந்தி, ஒன்றிய பொருளாளர் சகிலா பானு, ஒன்றிய இணைச் செயலாளர் சித்ரா, ஒன்றிய துணைத் தலைவர்கள் ராஜேஸ்வரி, கவிதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...