பீட்ரூட்டுக்கு நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உடுமலை விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை அருகே சீதோஷ்ண நிலை மற்றும் இடைத்தர்கள் காரணமாக பீட்ரூட் விலை குறைந்துள்ள நிலையில், தோட்டக்கலைத்துறை சார்பில் நிலையான விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பீட்ரூட்க்கு நிலையான விலை கிடைக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.



உடுமலை மற்றும் குடிமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கிணற்று பாசனத்தில் பீட்ரூட் பயிரிடப்படுகிறது. பொங்கல் பண்டிகை சீசனில், கிலோ, 30 ரூபாய் வரை பீட்ரூட் கொள்முதல் செய்யப்பட்டது.



ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால், விலை வேகமாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக, விலை கிலோ, 10 ரூபாய்க்கும் குறைவாக விலை போகிறது.

சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு, காய்கறிகளின் நுகர்வு குறைந்து, வரத்து அதிகரித்துள்ளதே விலை சரிவிற்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்சமயம் சீதோஷ்ண நிலை காரணமாகவும், இடைத்தரகர்கள் ஆதிக்கம் காரணமாகவும், பீட்ரூட் விலை கடுமையாக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...