மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக தோல் தானம் - மருத்துவர்கள் சாதனை!

மேட்டுப்பாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜ் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக தோல் தானம் பெறப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக உயிரிழந்த நபரின் தோல் தானமாக பெறப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (31). இவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் இன்று அவரது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.



இதனையடுத்து அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி, உயிரிழந்த நாகராஜ் உடலில் இருந்து தோல் மற்றும் கண்களை தானம் செய்ய அவரது தாய் வள்ளி ஒப்புதல் அளித்தார்.



இந்நிலையில் கோவையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். உடல் உறுப்புகளை தகுந்த பாதுகாப்பு வசதியுடன் எடுத்து செல்ல கூடிய பெட்டிகளுடன் வந்த மருத்துவர்கள் நாகராஜின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

நாகராஜின் உடலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தோல் தீக்காயம் ஏற்பட்டு தோல் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் விபத்தில் சிக்கி பெரிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ பரிசோதனைக்கு பின் பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை உருவாகிய 138 ஆண்டுகளில் இதுவரை தோல்தானம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...