பல்லடம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்!

பல்லடம் அருகே உகாயனூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வகுப்பு முடிந்து வேனில் வீடு திரும்பியபோது மாதப்பூரில் விபத்துக்குள்ளானது. விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகாயனூரில் ராஜா நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்களோடு பள்ளி முடிந்ததும் வாடகை வேனில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.



இந்த வேனை நாகராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். வேன் மாதப்பூர் வந்த போது எதிர்பாராத விதமாகப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறினர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.



இந்த விபத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனத்தைப் பொதுமக்கள் மீட்டனர். பின்னர் வேறு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...