குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய மிளகு - அறுவை சிகிச்சையின்றி அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்!

மூச்சுக்குழாயில் மிளகு சிக்கியதால், மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு, அறுவை சிகிச்சை இல்லாமல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவீன முறையில் பாதுகாப்பாக மிளகை அகற்றி உயிரை காப்பாற்றினர்.


கோவை: திருப்பூரைச் சேர்ந்த 1 வயது 4 மாத ஆண் குழந்தை திடீரென்று மூச்சு திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தைக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. சி.டி.ஸ்கேனில் அந்த குழந்தையின் மூச்சு குழாயில் அயல்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக உள் நோக்கி குழாய் செலுத்தி சோதித்துப் பார்த்தபொழுது மூச்சுக் குழாயில் மிளகு சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உள்நோக்குக் கருவி மூலம் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த மிளகு பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

இந்த சிகிச்சையினை காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர் டாக்டர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் பேராசிரியர் டாக்டர் கல்யாண சுந்தரம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சையினை மேற்கொண்டனர்.

உரிய நேரத்தில் மருத்துவர்கள் அளித்த சரியான சிகிச்சையால் குழந்தையின் உயிர் காப்பற்றப்பட்டதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...