கூடலூர் அருகே வனப்பகுதியில் திடீர் தீ - 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடு காணி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 10 ஏக்கர் பரப்பிலான செடி, கொடிகள் எரிந்து நாசம்.



நீலகிரி: கூடலூர் அருகே நாடு காணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் சுமார் 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது.



நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி காரணமாக வனப்பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் வறண்டு வருகின்றன. இதனால் கடும் வறட்சி நிலவ தொடங்கி உள்ள நிலையில் கூடலூர் அருகே உள்ள நாடு காணி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் சுமார் 10 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து நாசமானது.



இதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்கார வனப்பகுதியிலும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனையும் கட்டுப்படுத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



காட்டு தீ ஏற்பட்ட இடத்தில் டெட்டனேட்டர் குச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் கோட்ட உதவி வன அலுவலர் கருப்பையா மற்றும் தேவாலா போலிசார் டெட்டனேட்டர் குச்சிகளை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த டெட்டனேட்டர் குச்சிகள் வெப்பத்தினால் தீ பற்றிய போது காட்டு தீ ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...