உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

உடுமலை அருகே போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பள்ளபாளையம் கிளை சார்பில் இன்று தொடங்கப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களிடம் போதைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் பள்ளபாளையம் கிளையில் துவங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ்த்தென்றல் தலைமையில், உடுமலை முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் போதைக்கு எதிராக முதல் கையெழுத்திட்டுத் துவக்கிவைத்தார்.



சிஐடியூ செயலாளர் ஜெகதீசன், வி.தொ.ச கமிட்டி சுந்தரம், இயேசுராஜ் முன்னிலை வகித்தனர். இதில் உடுமலை பொருளாளர் குமரகுரு, கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, கருப்புச்சாமி, அஜீத்குமார் பெருமாள்சாமி, இமான் செந்தில்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் பொதுமக்களிடமும் கடை வீதிகளிலும் துண்டறிக்கை கொடுத்து போதைக்கு எதிராகப் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நூற்றுக் கணக்கானோரிடம் கையெழுத்துப் பெற்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...