உடுமலையில் கருகும் நிலையில் நெற்பயிர்கள் - தண்ணீர் திறப்பை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை பாசனத்திற்குட்பட்ட பகுதியில், 850 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களைக் காப்பாற்ற தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து இந்த மாதம் 28ஆம் தேதி முடிய மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 20ந்தேதி வரையில் தண்ணீர் திறப்பை நீட்டித்தால் மட்டுமே, சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.



உடுமலை அமராவதி அணையின் மூலம் சுமார் 57 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் பாசனவசதிபெற்று வருகின்றன. அமராவதி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அமராவதி ஆற்றின் கரையோர பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாசன வசதி, கால்நடைகளின் தாகம் தணிப்பதற்கு நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்து குளம், குட்டை, கிணறு போன்றவற்றின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுகின்றது.



இது தவிர வழியோரபேரூராட்சி, ஊராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்த காரணத்தால் அணை மூன்று முறை தனது முழு கொள்ளளவை எட்டியது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழையின்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 100 நாட்களைக் கடந்து 85 அடியாக நீடித்தது.

அமராவதி அணை பழைய ஆயக்ககட்டுபாசனத்தில் குமரலிங்கம் வாய்க்கால் பாசன பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் சுமார் 1350 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, தென்னை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, 850 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 135 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய நெல் வகைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ள நிலையில், நெற்பயிர்களில் தற்போது கதிர் பிடிக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த மாதம் 28ஆம் தேதி வரை மட்டுமே அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதாக அரசாணை உள்ளது. இந்த நிலையில்அணைகளில் இருந்து மார்ச் மாதம் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே நெற்பயிரைக் காப்பாற்ற முடியும் என்றும், பால் பிடிக்கும் பருவத்தில் வயலில் தண்ணீர் இல்லாவிட்டால் பயிர்கள் சேதமாகிவிடும் எனவும் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



நெல் சாகுபடிக்காக ஏக்கருக்கு 35 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், எதிர்பார்த்த மகசூல் கிடைக்காவிட்டால் மீண்டும் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்றும், இதைத் தவிர்க்கும் வகையில், மேலும் இரண்டு மாதங்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொமரலிங்கம் வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் தற்பொழுது 65.85 அடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...