பல்லடம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம விலங்கு - பரபரப்பு

பல்லடம் அடுத்த கரடிவாவி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் புகுந்த மர்ம விலங்கு ஒன்று கதவின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம விலங்கால் மருத்துவர்கள் செவிலியர்கள் பீதி அடைந்தனர்.

பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் கே.ஜி.எல் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த மருத்துவமனையில் உள்ள கதவின் கண்ணாடியை உடைத்து மர்ம விலங்கு ஒன்று உள்ளே புகுந்துள்ளது.



உள்ளே புகுந்த மர்ம விலங்கு மருத்துவமனையில் இருந்த கணினி மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இந்நிலையில் காலையில் பணிக்கு வந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனைக்குள் திருடன் புகுந்ததாக எண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த காமநாயக்கன் பாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு விலங்கின் கால் தடம் உள்ளே இருப்பதை கண்டுள்ளனர். மேலும் கதவை கடித்த பல் தாரை இருந்ததையும், கணினியை கடித்து வீசியதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.



இதனையடுத்து மருத்துவமனைக்குள் புகுந்தது மர்ம விலங்கு தான் என்று உறுதிப்படுத்தினர். இதனால் வனத்துறையினரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் இது மர்ம விலங்கின் செயல் என்று உறுதிப்படுத்தப்பட்டு இதற்கான விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் சிறுத்தை உலவுவதாக செய்தி வெளியான நிலையில் நேற்றிரவு மர்ம விலங்கு மருத்துவமனைக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மருத்துவமனையின் கட்டிடம் அனைத்து வசதிகள் கொண்டதாக இருந்தாலும் அதற்கான உபகரணங்களும் அதற்கான செயல்பாடுகளும் இன்றியும் சுற்றுச்சுவர் கூட இன்றி பழுதடைந்து உள்ளது.

மேலும் சிசிடிவி கேமரா இருந்தும் பயனில்லாமல் பதிவு செய்ய முடியாமல் செயலிழந்து உள்ளது. இந்த மருத்துவமனையை பாதுகாத்து தரம் உயர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...