தற்போதைய தமிழக முதலமைச்சர் நாளை பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை உள்ளது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழக முதலமைச்சர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையை பார்த்தால் அவர் நாளை பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை உள்ளது என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் ஷ்வச் மாரத்தான் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 1500 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஹோப்காலேஜ், சிட்ரா உல்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அங்கு வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், கவர்னர் பொறுமையாக ஆழமாக யோசித்து முடிவை அறிவித்திருக்கிறாரெனவும், இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதா என நாளைக்குதான் தெரியும் என கூறினார்.

இன்று எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையை பார்த்தால் நாளைக்கு அவர் பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது என கூறிய அவர், முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை இரண்டு கழகங்களும் ஆண்டு அழித்து விட்டது எனவும், கழக அரசுகளால் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியாது எனவும் கூறினார்.

இங்கு அதிகார போட்டி நடைபெற்றுவருவதாக கூறிய பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் முடிந்து விட்டன எனவும், நேர்மையான வளர்ச்சி தரக்கூடிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற புதிய தேடல் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவாகி உள்ளது எனவும் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...